நாமக்கல், ஜன.4- பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட் களே உள்ள நிலையில், கரும்பு கொள்முதல் செய்தவற்காக பள்ளிபாளையம் அருகே உள்ள சமயசங்கிலி கிராமத்தில் வியாபாரிகள் குவிந் துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள சமயசங்கிலி, கலியனூர் உள்ளிட்ட பகுதி களில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அறு வடை பணிகள் நடைபெறும். இங்கு விளைவிக் கப்படும் கரும்புகளை வாங்க வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து அதிகளவு வியா பாரிகள் வருகை தருகின்றனர். தற்போது பொங் கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள தால், பொங்கல் கரும்புகளை கொள்முதல் செய்வ தற்காக ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் சமயசங்கிலி பகுதியில் குவிந்துள்ள னர். காவிரி ஆற்றுநீர் தாராளமாக கிடைப்பத னால் இங்கு விளைவிக்கப்படக்கூடிய கரும்புகள் மிகுந்த சுவை கொண்டதாகவும், சுமார் 8 அடி உய ரம் வரை வளரக்கூடியதாக இருப்பதால் இந்த கரும்புகளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சராசரியாக 400 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு 5 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரை கரும்பின் தரத்தை பொறுத்து விற் பனை நடைபெறுகிறது. வியாபாரிகள் விவசாயி களிடமிருந்து கரும்புகளை கொள்முதல் செய்வ தற்கான பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஆய்வு இதனிடையே தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு நீள கரும்பு வழங்கப்பட உள்ள தால், கரும்புகளை கொள்முதல் செய்வதற்காக, கரும்புகளை தேர்வு செய்யும் பணிக்காக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா சமயசங்கிலி பகுதிக்கு வருகை தந்தார். அப்பொழுது பொங்கல் கரும்பின் நீளம், தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் பொழுது திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் டேவிட் அமல்ராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.