புதுச்சேரி, ஆக. 26-
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை எதிர்த்து வீதியில் இறங்கி போராடுவதற்கு பெண்கள் முன்வர வேண்டும் என்று சுதா சுந்தரராமன் அழைப்பு விடுத்தார்.
சமம் மகளிர் சுயசார்ப்பு இயக்கத்தின் 10 வது மாநில மாநாடு புதுச்சேரியில் சனிக்கிழமையன்று (ஆக.26) நடைபெற்றது. இயக்கத்தின் தலைவர் அன்பரசி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவர்களில் ஒரு வரான சுதா சுந்தர்ராமன் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், “பெண்கள் தங்களது வாழ்க்கையில் சுயசார்பு உள்ளவர்களாக வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் ஒரு அங்க மாக, சமம் பெண்கள் சுய சார்பு இயக்கம் முதன் முதலில் பாகூரில் துவங்கப் பட்டது”என்றார்.
இந்த இயக்கத்தில் எண்ணற்ற பெண்கள் உறுப்பினர்கள் சேர்ந்துள்ள னர். ஆட்சியாளர்களின் கொள்கைகளால் விலை வாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு போராடு வதற்கு முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
புதுவை பாரதியார் கிராம வங்கி தலைவர் ரஞ்சித் குமார், புதுச்சேரி அறிவியல் இயக்கத் தலைவர் டாக்டர். ஆர். மதி வாணன், அரசு ஊழி யர் சம்மேளன பொதுச்செய லாளர் ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் தீப லட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரிமுத்து வேலை அறிக்கையையும், வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் சிவகாமி யும் தாக்கல் செய்தனர். அறி வியல் இயக்க பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி மாநாட்டை நிறைவு செய்து பேசி னார்.
மாநாட்டு ஒருங்கி ணைப்பாளர் ரமேஷ் உட்பட திரளான பெண் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.
தீர்மானம்
புதுச்சேரியில் பல மாதங்களாக மூடப்பட்டு உள்ள ரேசன் கடைகளை திறந்து அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்கள் வழங்க வேண்டும். சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் அளிக்கப்படும் கடன் உதவிக்கு வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். மாநிலத்தில் நடை பெறும் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். நாடாளு மன்ற சட்டம் மன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஒன்றிய மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
நுண் நிதி நிறுவனங்களை கண் காணிக்க அரசு சார்பில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.