திருவள்ளூர்,ஜூலை 26-
சென்னை-கும்மிடிப் பூண்டி புறநகர் ரயில் பழுது காரணமாக எண்ணூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. எண்ணூர் ரயில் நிலை யத்தில் உயர் மின் அழுத்த கோளாறு காரணமாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். பொன்னேரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட னர். இதன் காரணமாக அடுத்தடுத்து ரயில்கள் நிறுத்தப்பட்டன. சில மணி நேரத்திற்கு பிறகு நிலைமை சீரடைந்த வுடன் ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி யது.