ராணிப்பேட்டை, செப்.4 - ராணிப்பேட்டை, சோளிங்கர் வட்டார அலுவலர் கே.வி.பாபு சாதியபாகுபாடு காட்டு தல், பாலியல் சீண்டல், பெண் ஆசிரியர்க ளிடம் கீழ்த்தரமாக பேசுவது உள்ளிட்ட மோச மான செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்தார். அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (செப்.4) காத்திருக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டி ருந்த நிலையில் கே.வி. பாபு தற்காலிகமாக திருவண்ணாமலை மாவட்டம், குறிஞ்சா புறம் வட்டாரத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். வட்டார அலுவலர் கே.வி.பாபு அங்கு சென்றும் இதே ஒழுங்கின செயலில் தான் ஈடுபடுவார் ஆகவே அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியாக தற்காலிக பணி மாறுதல் வழங்கப்பட்டது. இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலா ளர் பெ. செ. அமர்நாத், செ. சரவணன், சேனா சுந்தர் சிங், த. ரஜினி, கோ. ரங்கநாயகி, இளங்கோ, துளசி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.