districts

அண்ணாமலை பல்கலை.யில் சுரங்கவியல் பொறியியல் படிப்பு

சிதம்பரம், ஏப். 18- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகழகத்தில் பல்கலைக்கழக பொறியியல் புலம் மற்றும் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு முதல் சுரங்கவியல் பட்டய படிப்பை நடத்தி வருகிறது. இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலை பொறியியல் புல வளாகத்தில், ரூ.2  கோடி மதிப்பீட்டில் உயர் திறன் உபக ரணங்களை கொண்ட புதிய மேம்படுத்தப் பட்ட சுரங்கவியல் ஆராய்ச்சி ஆய்வகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா பொறியி யல் புல முதல்வர் முருகப்பன் தலைமையில் அணமையில் நடைபெற்றது. அண்ணா மலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் வாழ்த்திப் பேசினார். விழாவில் சுரங்கவியல் துறை இயக்கு நர் சி.ஜி.சரவணன் பேசுகையில், சுரங்கவி யல் பட்டய படிப்பில் மொத்தம் 60 பேர்  பயில்கின்றனர். 30 பேர் பொது அனுமதி சேர்க்கை செய்யப்படுகின்றனர். இதில்  நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 30 பேருக்கு முன்னுரிமையில் வாய்ப்புகள் வழங்கப் படுகிறது. அவர்களுக்கு கல்வி கட்டணத்தை என்எல்சி நிறுவனம் செலுத்துகிறது. 3 ஆண்டுகள் படிப்பு முடிந்தவுடன் என்எல்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. விழாவில் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் மற்றும்  நிர்வாக இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி சுரங்கவியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை திறந்து வைத்து பேசுகை யில், அண்ணாமலைப் பல்கலைக்கும், என்எல்சி நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, என்எல்சி நிறுவனத்தில் பல்வேறு பதவிகளில் பணிபுரியும் 13 ஆயிரம்  பேர் இந்த பல்கலையில் பயின்றவர்கள். சுரங்கவியல் படிப்பு பயிலும் மாணவர்க ளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இதனை  மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்எல்சி நிறுவனமும், அண்ணா மலை பல்கலை பொறியியல் புலமும் இணைந்து வரும் கல்வி ஆண்டில் சுரங்கவி யல் பொறியியல் படிப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.