விழுப்புரம் - காட்பாடி இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பது குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிகுமார் சனிக்கிழமை விழுப்புரத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விழுப்புரம் - புதுச்சேரி, விழுப்புரம் - சென்னை பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்குவதற்கான தேவைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.