வேலூர், மே 27 -
மக்கள் சேவையாற்ற விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளுக்கு வர வேண்டும் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
விஐடி பல்கலைக்கழகத்தில் ஸ்டார்ஸ் தின விழா சனிக்கிழமை (மே 27) நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி, ஸ்டார்ஸ் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கி, விழா மலரை வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசுகையில், ஸ்டார்ஸ் திட்டம் தற்போது தமிழ்நாடு மட்டு மல்லாமல் ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விஐடியில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. வேறு எந்த பல்கலைக் கழகமும் செயல்படுத்தாததை விஐடி பல்கலைக்கழகம் செயல்படுத்துகிறது.
கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார். இங்கு படித்துவிட்டு சென்ற மாண வர்கள் லஞ்சம் வாங்காமல் பணி செய்கிறார் கள் என கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
லஞ்சம், ஊழலை ஒழிக்க சட்டங்கள் இருந்தாலும் அதிலும் அதை நிறை வேற்றுவதில் ஊழல் வந்துவிடுகிறது என்றார். திறன் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், ஒருவருக்கு கல்வியால் தான் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விருப்பமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சி யர் உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணியை தேர்ந்தெடுக்கலாம்.
இதனால் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும் என்றார். இதில் பெங்களூர் டெல் கம்பெனியின் துணைத்தலைவர் இளவரசு கிருஷ்ணன், விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவ நாதன், உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன், பதிவாளர் ஜெய பாரதி, மாணவர் நல இயக்குநர் நைஜூ, இயக்குநர் சாமுவேல் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஸ்டார்ஸ் திட்ட ஒருங்கி ணைப்பாளர் மீனாட்சி வரவேற்றார். தழுவா குழந்தை நன்றி கூறினார்.