அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வெள்ளியன்று (பிப்.24) பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் வே.அருண் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் மிருதுளா, நிர்வாகி சஞ்செய் உள்ளிட்டோர் பேசினர்.