districts

img

நகராட்சி பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் வசதி

அம்பத்தூர், ஆக. 28-  அம்பத்தூர்  நகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தில் மாணவர்கள் ஓட்டலில் சாப்பிடுவது போல் அமர்ந்து சாப்பிடும் வசதியை நகராட்சி ஆணையர் இரா.சுமா, தலைவர் சுமதி முருகன், துணைத் தலைவர் எஸ்.ஜபருல்லா ஆகியோர் செய்து கொடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் படிக் கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் கடந்த  25ஆம் தேதி விரிவுபடுத்தப் பட்டது. இந்த திட்டம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும், ‌மாண வர்கள் ஒற்றுமையுடன் உணவகங்களில் சாப்பிடு வது போல் அமர்ந்து சாப்பி டும் வசதியை மாங்காடு  நகராட்சி மேல் ரகுராதபுரத் தில் உள்ள அரசு பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு உணவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக் கப்படுகிறதா என நகராட்சி ஆணையர் இரா.சுமா தின சரி பார்வையிட்டு‌ வருவது குறிப்பிடத்தக்கது.