திருவண்ணாமலை, ஜன.12- கேலோ இந்தியா விளை யாட்டுப் போட்டி ஜோதி பயணம் இம்மாதம் 14ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோலோ இந்தியா விளையாட்டு போட்டியை முன்னிட்டு திருவண்ணா மலை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேச்சு , கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர் களுக்கு ஜன. 14 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் பாராட்டுச் சான்று மற்றும் பரிசு வழங்கப்பட உள்ளன. மேலும், பொதுமக்க ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஜன. 12 அன்று மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.