தாம்பரம், அக். 28- தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் வசிப்பவர் சுப்புராஜ். இவரது மகன் கல்லூரி மாணவர் ஸ்ரீதர் (21). இந்நிலையில் வியாழக்கிழமை காலை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தாயை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக சுப்புராஜூம், ஸ்ரீதரும் தனித்தனியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். ஆதி நகர் அருகே சென்று கொண்டிருக்கும் போது, நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து ஸ்ரீதர் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்து கொண் டிருந்த அரசு மாநகர பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் ஸ்ரீதர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை கண் முன்னே விபத்தில் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.