districts

img

அமிலம் பட்டதால் ஆபத்தான நிலையில் மாணவர்

சிதம்பரம், ஜூன் 16-

     சிதம்பரம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அப்துல்சத்தார். இவரது மகன் அப்துல் ஹமீது. அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஜூன் 15 அன்று வகுப்பறையில் மின்விசிறி பழுதானதால் அருகில் இருந்து ஆய்வகத்தில் அமர வைத்துள்ளனர்.

    அப்போது, மாணவன் அப்துல் ஹமீது தொடையில் அமிலம் பட்டதால், தண்ணீரை ஊற்றிக் சுத்தம் செய்ய ஆசி ரியர் கூறியுள்ளார்.

   பின்னர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மயங்கி விழுந்து மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடி யாக சிதம்பரத்திலுள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

   அங்கு  தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதித்துள்ளனர். மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவனின் உடலில் பட்ட அமிலம் ரத்தத்தில் கலந்துள்ளதால் உயி ருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.