நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை
திண்டிவனம், மார்ச் 2- திண்டிவனம் அருகே நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தாராபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராம தாஸ். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இரண்டாவது மகள் இந்துமதி (19). இவர் கடந்த 2022ஆம் ஆண்டு அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 520 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். அதனை தொடர்ந்து மருத்துவராகும் கனவுகளுடன் புதுச்சேரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர் வுக்காக பயிற்சி பெற்று கடந்த ஆண்டு நீட் தேர்வு எழு தினார். அந்த தேர்வில் 350 மதிப்பெண்கள் பெற்றும் மருத்து வம் படிக்க இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து 2வது ஆண்டாக வீட்டிலிருந்தே நீட் தேர்வுக்கான பயிற்சி மேற் கொண்டு வந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வ தற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஓபிசி சான்றிதழ் பதிவு செய்து அதனை சனிக்கிழமை பெற்றனர். ஓபிசி சான்றிதழை இந்துமதியிடம் அவரது தந்தை மற்றும் சகோதரர் இருவரும் அளித்துவிட்டு விவசாய வேலைக்காக நிலத்திற்கு சென்றுள்ளனர். மாலை மீண்டும் வீடு திரும்பிய போது இந்துமதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மாணவியின் வீட்டுக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். இதுகுறித்து உயிரிழந்த மாணவியின் தந்தை ராமதாஸ் கூறுகையில், நீட் தேர்வின் மீதான பயத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுடார் என்று கண்ணீர் மல்க கூறினார்.
துறைமுகத்தில் தீ பிடித்து எரிந்த மீன்பிடி படகு
கடலூர்,மார்ச் 2- கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்ற மீனவர் தனக்கு சொந்தமான மீன்பிடி படகை, கடலூர் துறை முகம் சலங்கை நகரில் உள்ள உப்பனாற்றில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென அந்த படகு தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துறை முக தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பலத்த காற்று வீசியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் படகின் பெரும்பகுதி எரிந்து சேதமானதுடன் அதிலிருந்த வலை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மொத்த சேத மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு 30,159 பேர் எழுதுகின்றனர்
கடலூர், மார்ச் 2 - கடலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்வினை இன்று 30,159 மாணவர்கள் எழுதுகின்றனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடப்பு கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் மேல்நிலைத் தேர்வு இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 3 முதல் 25 வரையில் நடைபெறவுள்ளது. 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வா னது கடலூர் மாவட்டத்தில் 122 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 246 பள்ளி களைச் சேர்ந்த 14,949 மாணவர்களும், 15,210 மாணவிகளும் என மொத்தம் 30,159 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்விற்கு 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், மண்டல அளவிலான 3 விடைத்தாள் சேகரிப்பு மையங்களும், 3 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களும், 28 வினாத்தாள் வழங்கப்படும் வழித்தடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய காவலர்கள் மூலம் பாது காப்பு பணியில் ஈடுபடுத்திடவும், தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், போக்கு வரத்துத்துறை சார்பில், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றிட தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திடவும், தேர்வு மையங்களில் சுகாதாரம் சார்ந்த நட வடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணை யாளர் எஸ்.அனு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் என கூறி பொறியாளரிடம் ரூ.8லட்சம் மோசடி
விழுப்புரம், மார்ச் 2- குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி பொறியாளரிடம் நூதன முறையில் ரூ.8லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலை யனூர் வடபாலை தெருவைச் சேர்ந்தவர் பொறி யாளர் நவநீதகிருஷ்ணன் (36), இவரை கடந்த மாதம் 20-ந்தேதி வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர், பகுதி நேர வேலை எனக்கூறி ஒரு லிங்கை அனுப்பி வைத்தார். அந்த லிங்கினுள் சென்ற நவ நீத கிருஷ்ணன், தனக்கென பயனர் முகவரி, பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவுசெய்து உள்நுழைந்தார். தொடர்ந்து அந்த நபர், செய்யக் கூறிய வேலையை முடித்த பின்னர், நவநீதகிருஷ்ணனின் வங்கிக்கணக்குக்கு ரூ.4 ஆயிரம் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் மற்றொரு செல்போன் எண்ணிலிருந்து தொடர்பு கொண்ட நபர், சிறிய முதலீடு செய்தால் அதிகலாபம் பெறலாம் என ஆசைவார்த்தைக் கூறினார். இதை நம்பிய அவர் ஏற்கெனவே அனுப்பப்பட்ட லிங்கிற்குள் சென்று ரூ.10 ஆயிரம் முதலீடு செய்து ரூ.15,650மும்,ரூ.50 ஆயிரம் முதலீடு செய்து 70,007 பெற்றுள்ளார். பின்னர் நவநீத கிருஷ்ணன், தனது வங்கிக்கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்ட ஜி-பே மூலமாக அந்த நபர் அனுப்பச் சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு 10 தவணைகளாக மொத்தம் ரூ.8 லட்சத்து 6 ஆயிரத்தை அனுப்பினார். ஆனால் பணத்தைப் பெற்ற அந்த நபர், நவநீதகிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
துவரை, உளுந்து, பாசிப் பருப்பு விலை குறைவு
விருதுநகர், மார்ச் 2- விருதுநகர் சந்தையில் துவரை, உளுந்து, பாசிப் பருப்பு, மசூர் பருப்பு ஆகியவற்றின் விலை சற்று குறைந்து வருகிறது. பாமாயில், பட்டாணி பருப்பு விலை உயர்ந்து காணப்பட்டது. விருதுநகர் சந்தை யில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப் பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு: கடலை எண்ணெய் 15 கிலோ கடந்த வாரம் ரூ.2,600க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.50 வரை குறைந்துள்ளது. எனவே ரூ.2,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாமாயில் கடந்த வாரம் ரூ.2,180க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் டின்னுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது. எனவே, ரூ.2185க்கு விற்பனை யாகிறது. துவரம் பருப்பு 100 கிலோ நயம் ரூ.10,900 முதல் ரூ.11,500 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.600 குறைந்துள்ளது. எனவே, ரூ.10,300 முதல் ரூ.10,900 வரை விற்பனை செய்யப்ப டுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு வகை ரூ.11,500க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.100 குறைந்து ரூ.11,300க்கு விற்பனையாகிறது. தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு வகை ரூ.9,400 க்கு விற்கப் பட்டது. இந்த வாரம் ரூ.50 குறைந்து ரூ.9,350க்கு விற்கப்படுகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4,600க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.100 குறைந்துள்ளது. எனவே, ரூ.4,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத மோதலை தூண்டிய தலைமை ஆசிரியை பணி நீக்கம்
கடலூர், மார்ச் 2- சமூக வலைதளங்களில் மத மோதல்களை தூண்டும் விதமாக கருத்துக்களை பதிவு செய்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கோரணப்பட்டு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வரு கிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட இருபால் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியை உஷா ராணி, கடந்த சில நாட்களாக மதங்க ளுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் அநாகரிகமான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியை உஷா ராணி, சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டது தொடர்பாக விசாரணை நடத்தும்படி பள்ளிக் கல்வித்துறை, கடலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு உத்தர விட்டது. தொடக்கக்கல்வி அலுவலர் சுகப்பிரியா, விசாரணை நடத்தினார். விசாரணையில் உஷா ராணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அரசுக்கு எதிராக அநாகரிகமான கருத்துகளை பதிவிட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சுகப்பிரியா உத்தரவிட்டார்.
பசுமை மின்சாரத்தை சேமிக்கும் திட்டத்துக்கு ஒப்பந்த புள்ளி கோரியது மின்வாரியம்
சென்னை, மார்ச் 2- தமிழகத்தில் பசுமை மின்சாரத்தை சேமித்து மீண்டும் பயன்படுத்தும் வகையில், ‘பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்’ கட்ட மைப்பை செயல்படுத்தும் திட்டத்துக்கு ஒப்பந்த நிறு வனத்தை தேர்வு செய்ய மின்வாரியம் டெண்டர் கோரி உள்ளது. நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட பசுமை மின்சார பயன்பாட்டை அதிகரிக்குமாறு, மாநில அரசுகளை ஒன்றிய அரசு அறி வுறுத்தி வருகிறது. தமிழகத்தில் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைக்கும் வகையில் சூழல் நிலவுகிறது. இதனால், பல நிறுவனங்கள் இந்த மின்நிலையங்களை அமைத்து வருகின்றன. தற்போது பசுமை மின்சாரம் உற்பத்தியான உடனேயே பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருப்பது போன்று தமிழகத்தில் ஒருமணி நேரத்துக்கு ஆயிரம் மெகாவாட் பசுமை மின்சாரத்தை சேமித்து வைத்து பயன்படுத்தும் ‘பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்’ கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி, துணைமின் நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.