சென்னை, ஆக. 23-
சென்னை சென்ட்ரல் மற்றும் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சோதனையின் போது ரூ.36 லட்ச ரூபாய் சிக்கியது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் செவ்வாய்க்கிழமை இரவு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது இரவு 11 மணி அளவில் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்ட நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த நபர் பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (53) என்பதும், பெங்களூருவில் இருந்து ரயில் மூலம் ரூ.25 லட்சம் கொண்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க நகை வியாபாரியிடம் கொடுக்க கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், புதன்கிழமை காலை ஐதராபாத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளிடம் சோதனை செய்த போது, ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த வாசு (42) என்பவர் பையில் 11 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவர் சென்னை தங்க சாலையில் தங்கம் வாங்குவதற்காக அந்த பணத்தை கொண்டு வந்ததாக தெரி வித்துள்ளார்.
இதையடுத்து இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரு கிறார்கள். மேலும் இருவரிடமும் பணத்திற்கு உண்டான ஆவணங்கள் இல்லாததால் கைப்பற்றப்பட்ட பணத்தை வருமான வரித்துறையிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.