districts

img

பாஜக பிரமுகரிடமிருந்து கோவில் நிலத்தை மீட்கக்கோரி போராட்டம்

பாஜக பிரமுகரிடமிருந்து கோவில்  நிலத்தை மீட்கக்கோரி போராட்டம்

திருவள்ளூர், செப். 26- பாஜக பிரமுகரிடம் இருந்து கோயில் நிலத்தை மீட்க வலியுறுத்தி  அனுப்பம்பட்டு கிராம பொதுமக்கள், பொன்னேரி கோட்டாட் சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பம்பட்டு கிராமத்தில்  உள்ள கோயிலுக்கு சொந்த மான சுமார் 3 ஏக்கர் நிலத்தை பாஜக நிர்வாகி ஜானகிராமன் என்பவர் கடந்த 15 ஆண்டுகாலமாக குத்தகை எடுத்து அனுபவித்து வருகிறார்.இதற்கான குத்தகை தொகையை இது நாள் வரை யில் கோயில் நிர்வாகத்திற்கு வழங்க வில்லை. இதனால் மின் கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில் நிர்வாகம் உள்ளதாக பொது மக்கள் கூறுகின்றனர். இந்த நிலத்தை பாஜக நிர்வாகியிடமிருந்து  மீட்க வேண்டும். கிராம பொது மக்களுக்கு தலா 2 சென்ட் வீதம் தரை வாடகைக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்ககோரி கிராம மக்கள்  கோட்டாட்சியர் அலுவல கத்தில்  திங்களன்று (செப்.25), முற்றுகை யிட்டு மனு அளித்தனர். மேலும் பொன்னேரி  வட்டாட்சியர் மதிவாணனிடம் நேரடியாக தங்கள் பிரச்சனை குறித்து கூறி மனு அளித்த னர்.