விருத்தாசலம் வட்டம் ஊ.மங்களம் கிராமத்தில் வீடு இல்லாத தலித் மக்களுக்கு இலவச மனைப்பட்டா கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், பி.கருப்பையன், மாவட்டக் குழு உறுப்பினர் கலைச்செல்வன், வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன், கிளைச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.