புதுச்சேரி,பிப்.13- பிரீப்பெய்டு மின் மீட்டர் திட்டம் கைவிடும் வரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போராடும் என்று ஆர்.ராஜாங்கம் புதுச்சேரி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி வில்லியனூர் நெட்டப்பாக்கம் கொம்யூன் கமிட்டி சார்பில் நிதியளிப்பு-அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. வில்லியனூர் தென் கோபுர வீதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு கொம்யூன் கமிட்டி செயலாளர் ராம மூர்த்தி தலைமை தாங்கினார். சிபிஎம் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், மூத்த தலைவர் த.முருகன்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரு மாள், தமிழ்ச்செல்வன்,பிரபுராஜ் ஆகி யோர் பங்கேற்று பேசினர். ஏழை எளிய மக்கள், வியாபாரிகள் பாதிக்ககூடிய பிரீப்பெய்டு மின் மீட்டர் திட்டத்தை உடனடியாக அரசு கைவிட வேண்டும், மூடப்பட்ட ரேசன் கடைகளை திறக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினர். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வசூலித்த ரூ.1 லட்சத்தை மாநில செய லாளர் ஆர்.ராஜாங்கத்திடம் வழங்கப் பட்டது. கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர்கள் ராமசாமி, மாரிமுத்து,கொம்யூன் கமிட்டி உறுப்பினர்கள் மணிபாலன்,செங்குலத்தான்,தியாகராஜன்,வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.