districts

img

கடலூர் துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

கடலூர், நவ.17- வடமேற்கு வங்கக்கடலில் புதிய புயல் ஒன்று உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு ‘மிதிலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேச கடற்கரையை கடக்க கூடும் என்றும் இதனால் தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.  அதன் காரணமாக சென்னை, எண்ணூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறி வுரை வழங்கப்பட்டது. இதை அடுத்து கட லூர் துறைமுகத்தில், இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.