districts

img

கோவிந்தசாமி நகரில் குடியிருப்புகள் இடிப்பதை நிறுத்துக சிபிஎம், சிபிஐ தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை, மே 8 - கோவிந்தசாமி நகர் குடியிருப்புகளை அகற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாப்பூர் தொகுதி, கோவிந்தசாமி நகர் இளங்கோ தெரு பக்கிங்காம் கால்வாயை யொட்டி உள்ளது. இந்த தெருவில் உள்ள 625 வீடுகளில் கரையோரம் இருந்த 366 வீடுகள் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து அகற்றப் பட்டது. கரையின் மறுபுறம் உள்ள 259 மாடி வீடுகளை ஏப்.29ந் தேதியிலிருந்து வருவாய்த் துறையினர் அகற்றி வருகின்றனர். இந்நிலையில் ஞாயிறன்றும் (மே 8) குடியிருப்புகளை அகற்றம் பணி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியை சேர்ந்த கண்ணையா என்பவர் தீக்குளித்தார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் கீழ்பாக் கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனையறிந்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்த ரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகி யோர் கோவிந்தசாமி நகரை பார்வையிட்டனர்

இரா.முத்தரசன்
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய இரா.முத்தரசன், “கோவிந்தசாமி நகரை 40 ஆண்டுக ளுக்கு முன்பே குடிசை பகுதி என அரசு அங்கீகரித்துள்ளது. பக்கிங்காம் கால்வாய்க் கும், குடியிருப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கால்வாயின் நடுவில்தான் பறக்கும் ரயில் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஒருவர் தனது நிலத்தின் மதிப்பை உயர்த்திக் கொள்ள பொதுநல வழக்கை போட்டுள்ளார். இதை எதிர்த்து அரசு சார்பில் வாதாடி இருக்க வேண்டும்” என்றார். “இந்த விவகாரத்தை மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவும், கே.பாலகிருஷ்ணனும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று ள்ளனர். இத்தகைய சூழலிலும் அதிகாரிகள், காவல்துறையினர் பெண்களிடம் முரட்டுத்த னமாக நடந்து கொண்டுள்ளனர். இதெல்லாம் முதலமைச்சருக்கு தெரிந்திருந்தால், நிச்சய மாக அனுமதித்திருக்க மாட்டார் என நம்பு கிறேன். பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று இடம் கொடுத்து, குடியிருப்பை கட்டித்தர வேண்டும். எதுவும் தராமல் மக்களை நடுத்தெருவில் நிறுத்தக் கூடாது. அதிகார வர்க்கம் தனி நபரிடம் பெற வேண்டியதை பெற்றுக் கொண்டு மோசமாக நடந்து கொள்கிறது. இதை கண்டிக்கி றோம். இதனால் கண்ணையா என்பவர் தன்னை தானே மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார். இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வது கவலைக்குரியது. குடியிருப்புகளை அகற்றுவது தொடருமானால் மக்களோடு இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவதை தவி ர்க்க முடியாது.” என்றும் அவர் கூறினார்.

கே.கனகராஜ்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் குறிப்பிடு கையில், “பொதுநல வழக்கில் குடியிருப்போ ரின் கருத்துக்களை கேட்காமல் உத்தர விட்டிருப்பது சட்ட விரோதமானது. நீதிமன்ற நடைமுறை, மாண்புகளுக்கு விரோதமானது. அரசு கொள்கை முடிவெடுத்து, வகை மாற்றம் செய்து கொடுக்க முன் வந்தால் கூட நீதி மன்றங்கள் தடை விதிக்கின்றன. அப்படி யென்றால் நீதிமன்ற ஆட்சி நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பிய அவர் நீதிமன்றம் கருணை யற்று செயல்படுவதாக குற்றம் சாட்டினார். “கால அவகாசம் கூட தராமல் குடியிருப்பு களை அகற்றி வருகின்றனர். பணபலம் படைத்த வர்களுக்கு ஆதரவாக அரசு நிர்வாகம் செயல் பட்டு வருகிறது. மூத்த தலைவர் நல்லகண்ணு, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசிய பிறகும், குடியிருப்புகளை இடித்து வரு கின்றனர். அதிகாரிகள் குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லாமல் மக்களிடம் நடந்து கொண்டு ள்ளனர். சாக்கடைகளுக்கு மத்தியில் உள்ள குடி யிருப்புகளை பெரும்பாக்கத்தில் ஒதுக்கீடு செய்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக குடியி ருப்புகளை அகற்றுவதை நிறுத்த வேண்டும். மக்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. மக்களோடு இணைந்து நிற்போம்” என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வின் போது மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் (சிபிஎம்), எஸ்.ஏழுமலை (சிபிஐ) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.