districts

img

புராதன சின்னங்களை அழிக்கும் கல் குவாரிகள்

திருவண்ணாமலை, மே 27- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராமசாணி குப்பம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ராமசாணிகுப்பம் கிராமம் அருகில் உள்ள துர்க்கம் மலை கன்னிக்கோயில் உச்சியில் ஆற்காடு நவாப் காலத்து, கோட்டை, கோயில் மற்றும் கல்வெட்டுகள் உள்ளன. மேலும் வற்றாத சுனை தடாகமும் இருக்கிறது.  இந்த கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மூன்று கல்குவாரி கள் இயங்கி வந்தன. கல்குவாரியில் வெடிக்கும் அதி திறன் வெடியால் வீடு கள் விரிசல் ஏற்பட்டு சேதமடைகிறது. இயற்கை சூழலும் பாதிக்கப்படுகிறது. புராதன சின்னங்களும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, மனிதர்களுக்கும், இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கல்குவாரிகளை தடை செய்ய வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் கிராம மக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 2021 ஜூன் மாதம் 10 ஆம் தேதி கல்குவாரியில் வெடித்த வெடிகள் நிலநடுக்கம் ஏற்பட்ட தாக, கிராம மக்கள் அதிர்ச்சிய டைந்தனர். வீடுகளில் ஏற்பட்டிருக்கும் விரிசல்களால் எப்போதும் இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது.  

இதனையடுத்து, காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். பிறகு, வெடி வெடிப்பு குறித்து ஆரணி வட்டாட்சியர் கிராம மக்களிடம் அமைதி பேச்சு நடத்தினார். இதில், இரண்டு கல் குவாரிகளுக்கு,  மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. ஆனாலும், ஒரு கல்குவாரி  தொடர்ந்து இயங்கிக்கொண்டு வருகிறது.  அந்த ஒரு கல்குவாரியின் ஒப்பந்த மும் இந்த மாதம் முடிவு பெற்றுள்ளது.  எனவே, புராதன சின்னங்களையும், மக்கள் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, மீண்டும் கல்குவாரி செயல்பட அனுமதி வழங்கக்கூடாது என கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம்  கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்தங்கரை வட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கும் அனைத்து ஊராட்சிகளின் கிராமப்புற மக்களுக்கும் 100 நாள் வேலை அட்டை மற்றும் வேலை, நூறுநாள் வேலை செய்தவர்களுக்கு ஊதிய பாக்கி கேட்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடுத்திடக்கோரியும், பேரூராட்சிகளுக்கும் நகர்ப்புற வேலை திட்டத்தை விரிவுபடுத்திடவும், அரசு கொடுத்த பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சரிசெய்திட நிதிகேட்டும்,ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் எத்திராஜ்  மாநில செயலாளர் முத்து,மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி , மாவட்ட க்குழு உறுப்பினர்கள் செல்வராஜ் , பெரிய சாமி.வெங்கடாசலம்,வரதராஜி,வேலு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.