கடலூர்,ஜன.25- மூன்றாவது தமிழ்நாடு மாநில அளவிலான பீச் பென்காக் சிலாட் சாம்பி யன்ஷிப் போட்டி தேவனாம் பட்டினம் வெள்ளி கடற்கரை யில் சனிக்கிழமை (ஜன.25) நடைபெற்றது. இந்த போட்டியை கடலூர் மாநக ராட்சி மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார். பெண் காக் சிலாட் கடலூர் மாவட்ட செயலாளர் இ. இளையராஜா வரவேற் றார். தமிழ்நாடு பென்காக் சிலாட் சங்க பொதுச்செய லாளர் ஜி.பி.மகேஷ் பாபு முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. மகேஷ் குமார், திமுக கடலூர் மாநகர செயலாளர் கே. எஸ்.ராஜா, தமிழ்நாடு நுங்க ம்பாக்கம் மாதிரி பள்ளியின் எஸ். எஸ்.ராஜேந்திரன், புதுவை பள்ளி கல்வித்து றையின் உடற்கல்வி ஆசிரி யர் கே. தணிகை குமரன், அறி ஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்கு நர் பா. ஜோதி பிரியா, சின்ன கங்கணாங்குப்பம் புனித அந்தோணி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதல்வர் பி. சுஜாதா, கடலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பிர சன்னா, இளையராஜா, ஆர முது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் தமிழகம் முழுவதும் 28 மாவட்டங்க ளில் இருந்து 650 க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். கடற்கரையில் நடைபெறும் இந்தப் போட்டி யையொட்டி வீரர்கள் கடலில் குளிக்காமல் இருப்ப தற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.