கடுமையான அடக்கு முறைக்கும், உழைப்பு சுரண்ட லுக்கு உள்ளாகி வரும் உள்ளாட்சி ஊழியர்களின் உரி மைக்கு குரல் கொடுத்து திருப்பு முனையை ஏற்படுத்திட திருவள்ளூரில் 10 - வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 21 மாநக ராட்சிகள் 148 நகராட்சிகள் 488 பேரூராட்சிகள் 12,524 கிராம ஊராட்சிகள் என சுமார் 8 கோடியே 37 லட்சம் மக்கள் உள்ளனர். இவர்க ளின் அடிப்படை தேவையாக குடிநீர் சுகா தாரம் உள்ளது. இந்தப் பணியை நிறை வேற்றிட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் உள்ளாட்சி ஊழி யர்கள் சுமார் 3 லட்சம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். சுகாதாரத் துறையில் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்கு வதற்கு இவர்களின் மகத்தான உழைப்பும் காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது. இந்தப் பணியை தற்போது தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு அர சாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. கொடுமையான உழைப்புச் சுரண்ட லுக்கும் மத்தியில் பணிபுரிந்து வரும் இந்த தொழிலாளர்களுக்கு,
குப்பை அள்ளுவது நிரந்தர பணியாக உள்ளது, கூடை நிரந்தரம், குடிநீர் விநியோகம் செய்வது நிரந்தரமாக உள்ளது. ஆனால் தொழிலாளர்களை மட்டும் பணி இன்னும் நிரந்தரம் செய்யவில்லை. இத்தகைய தவறான கொள்கையை எதிர்த்து இந்த மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக மாநில அளவில் பல்வேறு போராட்டங்களை நடத்திட திட்டமிட உள்ளோம். நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த முறை கூடாது என்ற சட்டத்தை தனியார் முதலாளிக்கு ஆதரவாக ஒன்றிய பிஜேபி அரசு தளர்த்தி உள்ளது. இதனால் உள்ளாட்சித் துறையில் இனி அரசு பணி இல்லை என அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. குடிநீர் பணி யாளர் முதல், தூய்மை பணியாளர் வரை அனைத்தும் தனியாருக்கு என்ற முடிவை கைவிடக்கோரி இம்மாநாடு தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. கடைநிலை ஊழியர்களுக்கு அர சாணை 89 ன் படி, பிரதி மாதம் 5-ம் தேதி ஊதியம் வழங்க வேண்டும், அரசாணை 385 என்பது தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணி முடித்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசாணை 303 - 7 ஆவது ஊதியக்குழு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் போன்ற எண்ணற்ற அரசாணை கள் அமலாக்கிட அக்கறை செலுத்துவ தில்லை. அதிகாரிகளுக்கு அம லாகும் அரசாணைகள், கடைநிலை தொழி லாளர்களுக்கு மட்டும் அரசாணைகள் அமலாக்க மறுக்கப்படுகிறது. 4 ஆண்டு களுக்கு ஒரு முறை நிர்ணயிக்க வேண்டிய குறைந்தபட்ச ஊதிய குழு அரசாணை 2d 36, என்பது 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2023 ல் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் 2017 ல் போடப்பட்ட 2d 62 அரசாணையை விட குறைவான ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதால் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அரசாணை 2d 36 ரத்து செய்து இந்த ஆண்டு அரசாணை 2d 62 அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இது சிஐடியு நடத்திய சட்டப் போராட்டத்தில் மிகப்பெரிய வெற்றியாகும். நீதிமன்ற உத்தரவுகளை கூட அமலாக்க மறுக்கும் ஐஏஎஸ் அதி காரிகளை பிடிவாரண்டு பிறப்பிக்கும் அளவிற்கு நீதிமன்ற உத்தரவை கூட அமலாக்க மறுக்கும் அலட்சியம் தொடர்கிறது. பணி நிரந்தரம் உள்ளாட்சித் துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் என்பது பகல் கனவாக உள்ளது. மாநக ராட்சி முதல், கிராம ஊராட்சி வரை பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபர்கள், தூய்மை பணிபுரிவோர், டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட அனை வரும் நிரந்தரமில்லாமல், நிரந்தரமாக பணி புரியும் அவல நிலை நீடிக்கிறது. குறிப்பாக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பம்ப் ஆப்ரேட்டர்கள் பகுதி நேர ஊழி யர்கள் என அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. ரூ.30 லிருந்து ஊதியம் பெற்று வரும் அவர்களுக்கு 60 வயது முடிந்த பின்பு அம்போ என வீட்டுக்கு செல்லும் அவல நிலை நீடிக்கிறது. அவர்களுக்கு பணி நிரந்தரம், ஓய்வூதியம், பணிக்கொடை இல்லை . இந்த மாநாட்டில் இதற்கான தீர்மானங்களை நிறைவேற்றிட உள்ளோம். அதேபோல திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணி புரியும் தூய்மை காவலர்கள் கடந்த 2018 முதல் தமிழ்நாட்டில் 66 ஆயிரத்து 39 பேர் தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து ஊராட்சிகள் மூலமாக நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். அதேபோல டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக மலேரியா போன்ற கொடிய நோயிலிருந்து மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். அவர்களின் தினக்கூலி என்ற அடிப்படையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை விடுப்பு அறிவித்து, மீண்டும் பணிக்கு அமர்த்தும் தவறான நடைமுறை உள்ளது.
அவர்களுக்கும் தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி ஊழியர் சங்கம் சார்பில் அரசாணைகளை அமலாக்க தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரு கிறோம். குறிப்பாக 7 வது ஊதியக்குழு அமலாக்கிட கோரி கடந்த 2017 ஆண்டு முதல் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியதின் மூலம் சுமார் 18 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகையை பெற்று தந்துள்ளோம். அதேபோல பாதாள சாக்கடை மரணங்கள் குறித்து எதிர்த்து போராடி நிவாரணம், அரசு பணி பெற்றுள்ளோம். உள்ளாட்சி ஊழி யர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளோம். இப்படி எண்ணற்ற போராட்டங்களை நடத்தியதன் விளைவாக திருவள்ளூர் மாவட்டத்தில் 301 கிராமங்களில் உள்ளாட்சி ஊழியர் சங்கம் வலுப்பெற்று 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்து இந்த மாவட்டத்தில் உள்ளாட்சி ஊழியர்களின் பிரச்சினைகளில் அன்றாடம் தலையீடு செய்து வருகிறோம். தவித்த வாய்க்கு தண்ணீர் தரும் (மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்) தொழிலாளியின் கண்ணீர் சிந்தும் அவல நிலைக்கு முடிவு கட்டுவோம். தன்னையே அழுக்காகி ஊரை சுத்தம் செய்யும் தூய்மை பணி புரி வோர், துயர் துடைக்க நடைபெறும் மாநில மாநாட்டிற்கு மாநிலம் முழுவதும் வருகின்ற உள்ளாட்சி ஊழியர்களை திருவள்ளூர் மாவட்ட குழுவின் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.