districts

img

ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நவீன உபகரணங்கள்

சென்னை, அக். 25- ஸ்டான்லி மருத்துவ மனைக்கு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டிலான நவீன உபகரணங்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் வழங் கியது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கில் நவீன மருத்துவ  உபகரணங்கள் தேவைப்படு வதாக மருத்துவர்கள் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலா நிதி வீராசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கலாநிதி வீராசாமி இந்தியன் ஆயில் நிறு வனத்திடம் பேசினார். இதையடுத்து நிறுவனம்  தனது சிஎஸ்ஆர் நிதியி லிருந்து ரூ.50 லட்சம்  ஒதுக்கி ஸ்டான்லி மருத்துவ மனைக்கு தேவையான புதிய உபகரணங்கள் வழங்கினர். இதில் டாக்டர் கலாநிதி வீராசாமி, ராய புரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, திமுக சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் த.இளைய அருணா உள்ளிட்டு இந்தி யன் ஆயில் நிறுவன அதி காரிகள் கலந்து கொண்ட னர்.