சென்னை, நவ. 16- சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படு கிறது என மருத்துவமனை டீன் டாக்டர் பி.பாலாஜி தெரிவித்தார். உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் ‘சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நீரிழிவு நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. டாக்டர் பி.பாலாஜி தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.இந்நிகழ் வில் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்ட றியும் குளூகோ மீட்டர் கருவிகளை நோயாளி களுக்கு கலாநிதி வீராசாமி எம்.பி இலவ சமாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ராயபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் இளைய அருணா, மண்டல குழுத் தலைவர் ஸ்ரீராமுலு, நீரிழிவு மைய இயக்குநர் சுரேஷ், உறைவிட மருத்துவ அதிகாரி வனிதா மலர், கல்லூரி துணை முதல்வர் ஜமீலா, உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.