சென்னை, செப்.8- கட்டுமான தொழிலாளியின் தொடையில் குத்திய 3.5 அடி நீளமுள்ள இரும்புக் கம்பியை வெற்றிகரமாக ஸ்டான்லி மருத்துவர்கள் அகற்றினர். இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பி.பாலாஜி கூறுகையில், பழவேற்காட்டைச் சேர்ந்தவர் கலாசா (60). கட்டடத் தொழிலாளி யான இவருக்கு சற்று கண் பார்வை குறை பாடு உள்ளது. இவர் அதே பகுதியில் நடைபெற்ற கட்டுமான பணி ஒன்றில் உதவி யாளராக வேலை செய்து கொண்டிருந்த போது தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் வெளியே நீட்டிக் கொண்டி ருந்த சுமார் 8 அடி நீளமுள்ள கம்பி மீது கலாசா விழுந்துள்ளார். இதில் அவரது தொடையில் குத்திய கம்பி மறுபுறம் வெளியேறியுள்ளது. சக தொழிலாளர்கள் ரம்பம் மூலம் இரும்புக் கம்பியை அறுத்து விட்டு, தொடையில் குத்திய சுமார் மூன்றரை அடி கம்பியுடன் ஸ்டான்லி மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர்.அறுவை சிகிச்சை நிபுணர்கள் சத்தியபிரியா, அசோ கன் மற்றும் பல்துறை பேராசிரியர்கள் நாரா யணன், பவானி, மாலா ஆகியோர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப் பட்டு கலாசாவின் தொடையில் குத்தியுள்ள இரும்புக் கம்பியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தொடையில் உள்ள முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் வெற்றிகர மாக இரும்புக் கம்பியை அகற்றி மருத்து வக் குழுவினர் சாதனை படைத்துள்ள னர். பின்னர் அவர் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார் என தெரிவித்தார்.