districts

img

ஸ்தம்பித்து நிற்கும் லிப்ட் சேவை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவதிக்குள்ளாகும் நோயாளிகள்

சென்னை, ஜூலை 12- சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் (ஜிஎச்) உள்ள பெரும்பாலான லிப்டுகள் முறை யான பராமரிப்பு இன்றி ஸ்தம்பித்து நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள், மருத்து வர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், உதவியாளர்கள் பலதரப்பட்ட மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். ஆசியாவிலே மிகப்பெரிய  மருத்துவமனைகளில் ஒன்றாகவும் இந்தியாவிலேயே தலைசிறந்த மருத்து வமனைகளில் ஒன்றுமான  சென்னை அரசு பொது மருத்துவமனை திகழ்கி றது. நாள்  தோறும் இம் மருத்துமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை  அதிகரித்ததால் இரண்டு  அடுக்கு   மாடிகள் அதிநவீன தொழில்நுட்பத்து டன் கட்டப்பட்டன. 2001ல் அப்போதை முதலமைச்சர்கள் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டு 2005ல் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது.  இந்த மருத்துவமனையின்  டவர் 1, 2ல் தலா 8 என 16 லிப்ட்கள் உள்ளன.  இவற்றில் தற்போது ஒன்றிரண்டு  லிப்ட்கள் மட்டுமே இயக்கப்படு கின்றன.  ஒட்டுமொத்த மருத்துவ வளாகம் மற்றும் கல்லூரி வளாகங்க ளில் 42 லிப்ட்கள் உள்ளன. இதில்  குறிப்பிட்ட சில லிப்ட்கள் மட்டுமே  பயன்பாட்டில் உள்ளன. 3 ஷிப்டில்   ஒரு லிப்ட்க்கு குறைந்தது 2  ஆப்பரேட்டர்கள் தேவைப்படுகின்ற னர். ஆனால் ஜிஎச் மருத்துவமனையில் 20 ஆபரேட்டர்கள் மட்டுமே கூடுதல் வேலை பளுவில் பணியாற்றி வருகின்ற னர்.

மாற்றுத்திறனாளி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப் படவேண்டிய இந்த பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது மருத்துவமனையில் அலட்சியத்தை காட்டுகிறது என நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். லிப்ட்க்காக நீள  வரிசையில் வீல்சேரில் அமர்ந்திருந்த  ஒரு நோயாளியை கேட்டபோது, “எனக்கு ஆபரேசன் நடந்திருக்  கிறது. என்னால் நடக்க முடியாது. என்னை தள்ளிச்செல்லும் உதவியா ளர் சாய்தளத்திற்கு கொண்டு செல்லமுடியாத நிலையில் இருக்கிறார். லிப்ட்க்காக 20 நிமிடம் காத்திருக்கிறேன். என்னைப்போன்று ஏராளமான நோயாளிகளும் பெண்கள், முதியவர்கள் அது ஏன்  இந்த மருத்துவமனையில் நர்ஸ்,  ஊழியர்கள் கூட காத்திருக்க வேண்டியுள்ளது’’ என்றார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கமுடியாத ஏழைகள் நாங்கள்.எங்களின் நலனில் அரசு அக்கறை கொண்டு இந்த லிப்ட்களை உடனே சரிசெய்ய உதவுங்கள் ஐயா என்று கையெடுத்து கும்பிட்டார். இந்த பிரம்மாண்ட மருத்துவமனை யில் 3500 படுக்கை வசதிகளும் 800 மருத்துவர்களும் 750 செவிலியர்களும் நூற்றுக்கணக்கான உதவியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் அவர்களது உறவினர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகள் , அவசர சிகிச்சைக்கு செல்பவர்கள் லிப்ட் இல்லாததால் படியிலும் சறுக்கு தளத்திலும் அரக்க பறக்க ஓடுவதை காண சகிக்கமுடியவில்லை. மேலும் மருத்து பொருட்கள், உணவு, லான்டரி,  வீல்சேர், ஸ்டெச்சர் ஆகியவற்றை சாய் தளத்தில் தள்ளியும் தூக்கியும் செல்வதால் ஊழியர்களுக்கு மன உளச்சல், உடல்சோர்வு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

மருத்துவ சேவையில் தேசிய அளவில் விருதுகளை குவித்துள்ள சென்னை ஜிஎச் மருத்துவமனையின் உள்கட்டமைப்பை பலப்படுத்துவது டன் லிப்ட் வசதியை மேம்படுத்த வேண்டும் என மருத்துவ நிர்வா கத்தை பொதுமக்கள் கேட்டுக்கொண் டுள்ளனர். இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனையின் டீன் தேரணி ராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதா வது, மருத்துவமனையில் உள்ள  பெரும்பாலான லிப்ட்கள் பழுதடைந்து விட்டதால் புதியதாக மாற்றம் செய்ய  உள்ளோம். டவர் 1, 2 ல் ஒப்பந்த அடிப்படையில் இரவு பகல் பாராமல் லிப்ட் அமைக்கும் பணி வேகமாக நடந்துவருகிறது. டவர் 3ல் அனைத்து லிப்ட்களும் இயங்குவதாக தகவல் வந்துள்ளது. வருகிற வெள்ளிக் கிழமைக்குள் 10 லிப்ட்கள் பயன்பாட் டிற்கு வந்துவிடும். யாரும் பாதிக்காத வகையில் எங்கள் பணி இருக்கும் என்று கூறினார்.   - ம.மீ.ஜாபர்.