செங்கல்பட்டு மாவட்டம், எஸ்.ஆர்.எம் காட்டாங்கொளத்தூர் பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வாய் நோய்க் குறியியல் மற்றும் நுண்ணுயிரியல் துறை சார்பில் ஒரு உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.அதில் அமைப்பு செயலாளர் டாக்டர்கள் எ. சிவச்சந்திரன், எம்.சத்தியகுமார், ஆர்.அரவிந்தன் ஆகியோர் 17 வயது முதல் 21 வயது உட்பட்ட 4000 மாணவர்களுக்கு ஒரே இடத்தில் வாய்வழி சுய பரிசோதனை குறித்து விளக்கமளித்தார். பின்னர் மாணவர்கள் சுயபரிசோதனை மேற்கொண்டனர்.