கள்ளக்குறிச்சி, ஆக 1-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இம்மாதம் 4 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் 11 ஆம் தேதி கலைஞர் கருணாநிதி ஆகியோர் பிறந்தநாள் பேச்சுப்போட்டி தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. காலை 10 துவங்கும் போட்டியில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு தனித்தனியாக மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த தலா ஒரு மாணவருக்கு சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதமும் ஆக மொத்தம் ரூ.24 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.