districts

img

சனாதன ஒழிப்பை தீவிரமாக முன்னெடுப்போம்

சென்னை, செப். 1 - சனாதன ஒழிப்பு போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் கூறினார். தமுஎகச சார்பில் செப்.2 அன்று சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. இதனையொட்டி தென்சென்னை மாவட்டத்திலிருந்து புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவுச்சுடர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த சுடர் பிரச்சாரத்தை வெள்ளியன்று (செப்.1) சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதி யில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: சனாதன இருளைக் கிழிக்கும் வரை, நமது கோபத்தை பிரதிபலிக்கும் வகை யில் (நினைவு) சுடர் கொழுந்துவிட்டு எரி யும். திரு.வி.க., சர்க்கரை செட்டியார், ம.சிங்காரவேலர், அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் போன்றோரின் வழியில் நமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம். அருந்ததியர் மக்களுக்கு நாமம் போட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வாக்களிக்க வைத்தவர் தோழர் பி.ராமமூர்த்தி. அந்த பாரம்பரியத்தோடு, சனாதனத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னேறி செல்வோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, பொருளாளர் சைதை ஜெ., துணைப் பொதுச் செயலாளர்கள் பிரக தீஸ்வரன், அ.இலட்சுமி காந்தன், துணைச் செயலாளர்கள் மருதுபாரதி, ஏகாதசி, தென்சென்னை மாவட்டச் செய லாளர் அ.மலர்விழி, துணைச் செயலாளர் மு.சாலா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.