சுவாமி சகஜானந்தாவின் 132ஆவது பிறந்த நாளையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சிறப்பு கருத்தரங்கம் சி.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் எம்.,வீரபத்திரன், ப.செல்வன், ஏ.லட்சுமணன், காமராஜ், கணபதி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.