சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழித்துறை சார்பில் புதனன்று (நவ.8) மெரினா வளாகத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘மொழிபெயர்ப்பு அனுபவங்கள்’ என்னும் தலைமையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மயிலை பாலு உரையாற்றினார். இதனையொட்டி, தாம் மொழிபெயர்த்த நூல்களை, துறையின் தலைவர் முனைவர் ய.மணிகண்டனிடம் வழங்கினார். உதவி பேராசிரியர்கள் முனைவர் வே. நிர்மலர் செல்வி, முனைவர் வாணி அறிவாளன் ஆகியோர் உடன் உள்ளனர்.