districts

img

இருளர் மக்களுக்கு சிறப்பு முகாம்

விழுப்புரம்,செப். 3- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பழங்குடியினர் இன மக்களுக்கு ஆதார் அட்டை மற்றும் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான சிறப்பு முகாமை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பழங்குடியின இருளர் இன மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டன. செஞ்சி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ரா.விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.எம்.மொக்தியார் அலி, வல்லம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார், செஞ்சி வருவாய் வட்டாட்சியர் ஏழுமலை, தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலன்) புஷ்பவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.