districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் 

சென்னை,நவ.8- சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வசித்து தொழில் செய்து வரும்  வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி  பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட  விரும்புகிறார்கள். இதனையொட்டி தமிழ் நாடு  அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்தது. கூட்ட நெரிசல் இல்லாமல் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் நெரிசல்  ஏற்படாமல் இருப்பதற்காக மேலும் 5 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.  வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 3 நாட்கள் சிறப்பு  பேருந்துகள் விடப்பட்டுள்ளன. வழக்கமாக  தினமும் இயக்கப்படும் 2100 பேருந்து களுடன் கூடுதலாக 1365 பஸ்கள் வீதம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம்  4675 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு தயாராக உள்ளன. இதுவரையில் 1.25 லட்சம்  பேருக்கு மேல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து மட்டும் செல்ல 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு  செய்துள்ளனர். இந்த நிலையில் 13-ந்தேதியும் அரசு விடுமுறை விடப்பட் டுள்ளதால் வெளியூர்செல்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. சிறப்பு பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே. நகர்,  தாம்பரம்,  அண்ணாநகர், பூந்தமல்லி விரைவுச்சாலை பேருந்து நிலையங்களில் வியாழனன்று இயக்கப்படுகின்றன. முன்பதிவு செய்த பயணிகள் அந்தந்த பஸ் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து  கோயம்பேட்டிற்கு இணைப்பு பஸ் வசதியும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு பஸ்களின் கட்டணம் குறைவாக இருப்பதால்  பயணிக்க பலரும் முன் வருகிறார்கள். இதுவரையில் 1500க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு நடந்துள்ளது.

3 நாட்கள்  கூடுதல் மெட்ரோ ரயில் சேவை

சென்னை, நவ.8- சென்னையில் பொது மக்கள் வசதிக்காக 3 நாட்கள்  கூடுதல் சேவை வழங்கப் படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.  இது தொடர்பாக  மெட்ரோ நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, வியாழன் (நவ.9) முதல் சனிக்கிழமை(நவ.11) வரை 3 நாட்களில் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8 மணி  முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை கள் இரண்டு வழித்தடங் களிலும் 9 நிமிட இடை வெளிக்கு பதிலாக 6 நிமிட  இடைவெளியில் இயக்கப் படும். போக்குவரத்து நெரி சல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில்  மட்டுமே நின்று செல்லும் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

சென்னை, நவ.8- சென்னையிலிருந்து இயக்கப்படும் ஆம்னி  பேருந்துகள் கிளாம்பாக்கத் தில் மட்டுமே நின்று செல் லும் என அறிவிக்கப்பட் டுள்ளது. தீபாவளியையொட்டி சென்னை நகரப் பகுதி களில் போக்குவரத்து நெரி சலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அங் கிருந்து பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல் பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி  பேருந்துகளும் கோயம் பேட்டில் இருந்து புறப்பட்டு,  புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கத்தில் மட்டுமே  நின்று செல்லும் என்று ஆம்னி பேருந்து உரிமை யாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டண விவரம் இணைய தளத்தில் பதிவேற்றப்பட் டுள்ளது. பயணிகள் ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம், என்று கூறப்பட்டுள்ளது.

கடலூர் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சஸ்பெண்ட்

கடலூர் நவ.8- கடலூர் மாநகராட்சி கூட்டம் புதனன்று (நவ.8) மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. ஆணையர் காந்திராஜ், துணை மேயர் தாமரைச் செல்வன் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பாஜக கவுன்சிலர் சக்திவேல் (இவர் மீது திருட்டு வழக்கு உள்ளது), “பான்பரி மார்க்கெட் கட்டிடம் இடிப்பு குறித்தும் அங்கு பொருட்கள் திருடு சென்றது குறித்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கம் அளித்த ஆணையர் காந்தி ராஜ்,“ இந்த கூட்டத்தில் மக்கள் குறைகள் தொடர்பாக பேச வேண்டும். சொந்த பிரச்சனைகள் குறித்து பேசக் கூடாது. நீங்கள் கூறும் பிரச்சனை தொடர்பாக உங்கள் மீதான வழக்கு நிலுவை யில் உள்ளதால் நாங்கள் ஒன்று கூற முடி யாது” என்றார். மேயர் சுந்தரி ராஜா, “பான்பரி கட்டிடம் இடிக்கும் பணிக்கு உரிய முறை யில் ஒப்பந்தம் விடப்பட்டது. ஒப்பந்தம் எடுத்தவர்கள் அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்” என்றார். அப்போது பாஜக மற்றும் திமுக கவுன்சி லருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறும் நிலை உருவானது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.  சபை நாகரிகத்தை மீறிய பாஜக கவுன்சிலர் சக்திவேலை அடுத்த இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவிட்டார்.

தீப விழா: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை


திருவண்ணாமலை,செப்.8- திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு, ஆட்டோ  வாகனங்களில் வசூ லிக்க வேண்டிய கட்டண விவரம் மற்றும் ஓட்டுநர்கள் பின்பற்றப்பட வேண்டிய நடை முறைகள் பற்றிய ஆலோசனை கூட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் செ.சிவக்குமார் தலைமையில் நடை பெற்றது. திருவண்ணாமலை மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கே.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் போது அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலித்தால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும். ஆட்டோ பயணிகளிடம் ஓட்டுநர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்களோ பொருள்களோ கண்டறியப்பட்டால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஓட்டுநர்கள் சீருடையில் இருக்க வேண்டும். பெயர் மற்றும் வில்லை அணிய வேண்டும். ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நடப்பில் இருக்க வேண்டும்.  ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஆட்டோக்களை நிறுத்தி பொதுமக்களை அழைத்துச் செல்ல வேண்டும். நபர் ஒன்றுக்கு ரூ.30 மட்டும் வசூலிக்க வேண்டும் அதிகாரிகள் கூறினர்.

காலமானார்

சென்னை, நவ. 8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் ஜி. வெங்கடேசனின் தாயார் ஜி.ஆண்டாள் புதனன்று (நவ.8 காலமானார். அவருக்கு வயது 85. அன்னாரது உடல் அஞ்சலிக்காக அங்காளம்மன் கோவில் தெரு, கோட்டர், சென்னை-85 என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் வியாழனன்று (நவ.9) பிற்பகல் 3 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு: ஆட்சியர் அழைப்பு

கள்ளக்குறிச்சி நவ 8- பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய  விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அழைப்பு விடுத்துள்ளார். விவரம் வருமாறு:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் ரபி, குறுவை கால தோட்டப்பயிர் மரவள்ளி, வெங்காயம், கத்தரி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். இதற்காக சின்னசேலம், நயினார்பாளையம், இந்திலி, வடக்கனந்தல், ஆலத்தூர், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், நாகலூர், அரியலூர், ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி, சங்கராபுரம், சேராப்பட்டு, திருக்கோவிலூர், எறையூர், உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி, திருநாவலூர், எலவனாசூர் பேட்டை, வெள்ளிமலை, களமருதூர், மணலூர் பேட்டை குறு வட்டங்களில் விவசாயிகள் பதிவு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு வெங்காயம் ரூ. 909.17, கத்தரி ரூ 817.51 தொகையை வரும் ஜனவரி 31ஆம் தேதி குள்ளும், மரவள்ளி ரூ. 1.517.51 பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் செலுத்தி விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.  எதிர்பாராத திடீர் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் போது வழக்கத்தை விட 50 விழுக்காடு மகசூல் குறைந்திருந்தால் காப்பீடு தொகை வழங்கப்படும்.  அறுவடை முடிந்த பின் 2  வாரங்களுக்குள் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் தீபாவளிக்கு  10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை

புதுச்சேரி, நவ.8- தீபாவளியையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. தீபாவளியையொட்டி புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குநர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-  தீபாவளியை முன்னிட்டு அரசு அறிவித்துள்ளபடி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு (அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ அட்டைதாரர்கள் தவிர) தலா 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு இணையான பணம் ரூ. 490 வீதம் 3,37,406 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 16,53,28,940 வங்கி கணக்கில் நேரடி பணப் பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.