இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேரவை ஞாயிறன்று (நவ.27) எழும்பூரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வே.அருண்குமார் தலைமை வகித்தார். பேரா.இரா.காளீஸ்வரன், எழுத்தாளர் விழியன், சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்த்சாமி, மாவட்டச் செயலாளர் சி.மிருதுளா உள்ளிட்டோர் பேசினர்.