சென்னை, ஜூலை 30-
ஓணம் பண்டிகையை ஒட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏராளமான கேரளா மக்கள் வசிக்கின்றனர்.இந்நிலையில் ஓணம் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
சென்னை டூ எர்ணாகுளம்
ரயில் எண் 06046 கொண்ட எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் எர்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 24, 31 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய நாட்களில் இயக்கப்படும். இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமார்க்கத்தில் ரயில் எண் 06045 கொண்ட சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் ஆகஸ்ட் 25, செப்டம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். பிற்பகல் 3.10 மணிக்கு சென்னையில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
தாம்பரம் டூ மங்களூரு
ரயில் எண் 06041 கொண்ட தாம்பரம் - மங்களூரு ஜங்ஷன் இடையிலான சிறப்பு ரயில் ஆகஸ்ட் 22, 29, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். பிற்பகல் 1.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ரயில் எண் 06042 கொண்ட மங்களூரு ஜங்ஷன் - தாம்பரம் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 23, 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மங்களூருவில் காலை 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.