சென்னை,டிச.22- எண்ணூர் எண்ணை கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமைத் தாயகம் தலைவர் முனை வர் சௌமியா அன்புமணி வெள்ளியன்று (டிச.22) பார்வையிட்டு பாதிக்கப் பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில், எண்ணூர் எண்ணை கசிவு தமிழ் நாட்டின் கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும். தற்போது அரசு அறி வித்துள்ள இழப்பீடுகள் மிகக் குறைவானதாகும். பாதிக்கப்பட்ட அனை வருக்கும் முழுமையான இழப்பீட்டை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சூழலமைப்பை மறு சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றுக்காக மாசுபடுத்திய வரே பொறுப்பேற்கும் கோட்பாட்டை முழுமை யாக செயலாக்க வேண்டும். மேலும், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் 2022ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தவாறு, எண்ணூர் கழிமுகப் பகுதியை பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலப்பகுதியாக அறிவித்து, இப்பகுதியின் சூழலியல் அமைப்பை முழுமையாக மீளுருவாக்க வேண்டும் என்று தெரி வித்தார். காலநிலை மாற்றம் இனி வரும் ஆண்டுகளில் பேரி டர்களை அதிகமாக்கும் என்பது அறிவியல் உண்மை ஆகும். சென்னையில் பெருவெள்ளம் தாக்கியது. தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் ஓராண்டின் மழை ஒரே நாளில் பொழிந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இனி மேலும் தாமதிக்காமல், தமிழ்நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கும் சோழ மண்டல கடற்கரையை முழுமையாக பாதுகாக்கும் நடவடிக்கைகளை போர்க் கால வேகத்தில் முன்னெ டுக்க வேண்டும் என்றார்.