districts

சாராயம் விற்ற 12 பேர் கைது

குடியாத்தம், மே 18-

    குடியாத்தம் தாலுகா காவல் துறை யினர் குடியாத்தம் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர். அப்போது கள்ளச்சாராயம் விற்றுக்கொண்டிருந்த தனகொண்ட பல்லி கிராமத்தைச் சேர்ந்த மரியா (65), சேட்டு (75), அன்பு (65), பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (32), கோமதி (32), சேம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (40), மோர்தானா ஜங்காலப்பல்லி பகுதியை சேர்ந்த அமுதா (38), எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா (43), மோர்தானா கிராமத்தைச் சேர்ந்த திலகா (40), பொட்டியம்மாள் (67), வேலு (38) ஆகிய 11 பேரை காவல் துறையினர் கைது செய்து,  அவர்களிடமிருந்த 600 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

   அதேபோல் குடியாத்தம் டவுன் காவல் துறையினர் வாகன சோதனை யில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கி ளில் வந்தவரை பிடித்து விசா ரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெல்லூர் பேட்டையைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பதும், கள்ளச் சாராயத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 50 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளை யும் பறிமுதல் செய்தனர்.