சென்னை, செப். 19- பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி தினமாக அனுசரிக்கும் பொருட்டு சென்னை சமூகப்பணி கல்லூரியின் சமூகநீதி மற்றும் சமத்துவ மையம் சார்பில் ‘சமூக அரசியல் பார்வையில் சமூக நீதியை புரிந்து கொள்ளுதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற நீதிபதி து.அரிபரந்தாமன் கலந்து கொண்டு பேசுகையில், இந்திய துணைக் கண்டத்தில் ஆலய நுழைவு, பொது வெளியை பயன்படுத்துதல் போன்ற சமூக நீதிக்கான வைக்கம் போராட்டம், சிவகாசி, கமூதி போராட்டங்கள் குறித்தும், தமிழ் நாட்டில் நீதிக்கட்சி மற்றும் பெரியாரின் சனாதானத்திற்கு எதிரான போராட்டங்கள் மூலம் சமூகநீதியை மீட்டெடுத்த வரலாறு குறித்தும் பேசினார். வழக்கறிஞர் அருள்மொழி பேசுகையில், தமிழ்நாடு அரசின் பள்ளி மாணவர்களுக் கான காலை உணவு, மகளிர் உரிமைத் தொகை, மகளிர்க்கான விலையில்லா பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் குறித்து பேசினார்.பேராசிரியர். ஆண்டனி ஸ்டீபன் நன்றி கூறினார். சமூகநீதி மற்றும் சமத்துவ மைய மானது இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் நிதி அளிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.