விழுப்புரம்,ஜன.4- சென்னையிலிருந்து ஒரு அரசுப்பேருந்து 30 பயணி களுடன் மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தது. விழுப்பு ரம் அருகே உள்ள பேரங்கியூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே தேசிய நெடுஞ்சாலையில் 8 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இருந்தது. அதன் மீது ஏற்றக் கூடாது என்ற காரணத்தினால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்த பிரேக் போட்டார். அதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு (சென்டர் மீடியன்) கட்டையை உடைத்துக் கொண்டு அடுத்த மார்க்க சாலைக்கு ஓடியது. அப்போது அவ்வழியே எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் விழுப்புரம் பூந்தோட்டம் பாதை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அறிவரசன் (31) படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்ப இடத்துக்கு வந்த காவல்துறையினர், விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பாம்பை காப்பாற்ற நினைத்து பேருந்தை நிறுத்த பிரேக் போட்டதால் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.