புதுச்சேரி, ஜூன் 8-
புதுவையில் பெரும்பாலான பேருந்து நிறுத்தத்தில் பயணி கள் நிழற்குடை இல்லை. பொது மக்கள் வெயில், மழையில் காத்திருந்து பேருந்தில் செல்ல வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவை போக்கு வரத்து துறை ரூ.3 கோடியே 25 லட்சத்தில் நவீன வசதிகளுடன் 20 இடங்களில் ஸ்மார்ட் பயணி கள் நிழற்குடை அமைக்க திட்ட மிட்டுள்ளது.
இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம், ரயில் நிலையம், பஸ் நிலையம், காம ராஜர் சிலை சதுக்கம், வெங்கட சுப்பாரெட்டியார் சதுக்கம், எஸ்.வி. படேல் சாலை, செஞ்சி சாலை உள்ளிட்ட இடங்கள் கண்டறியப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பய ணிகள் நிழற்குடையில் கண்காணிப்பு கேமராக்கள், நவீன இருக்கை, எல்.இ.டி. விளக்குகள், எப்.எம். ரேடியோ, செல்போன் சார்ஜிங் வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்வுதளம் உட்பட பல நவீன வசதிகள் செய்யப்பட உள்ளது.
மேலும் நவீன தகவல் பலகையில் வழித்தட எண், பேருந்துகள் வந்து சேரும் தகவல், வருகை நேரம் குறிப்பிடப்படும். இதற்காக 2 எல்.இ.டி. பேனல்கள் வைக்கப்பட உள்ளது. ஒன்றில் பொதுமக்கள் பயன்படும் தகவல்களும், மற்றொன்றில் விளம்பரங்களும் ஒளிபரப்பாகும். இதன்மூலம் உள்ளாட்சி, நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். இந்த திட்டத்துக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட உள்ளார்.