சென்னை, டிச. 27 - ஒன்றிய அரசு நிர்பந்தத்தை ஏற்று ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் வலியுறுத்தி உள்ளார். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி கையெழுத்து இயக்கம் நடத்தி, மின்வாரிய அலுவலகங்களில் மனு கொடுக் கும் இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக மதுரவாயல் பகுதிக்குழு சார்பில் புதனன்று (டிச.27) மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1600 படிவங்களை போரூர் துணை மின் நிலைய உதவி பொறியாளரிடம், கே.சாமு வேல்ராஜ் வழங்கினார். இதனையொட்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சாமுவேல்ராஜ், “தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிப் பதற்காக ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மின்சார வாரியம் 70 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மீள முடியா மல் உள்ளது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த 24 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இதனால் மக்களுக்கு மின் கட்டணம் உயரும். மின்வாரியம் படிப்படியாக தனியார்மயமாகும். இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம், ஒன்றிய மின்சார மானியம் ஆகியவற்றை பறிக்கும் ஆபத்துகளும் இந்த திட்டத்தில் உள்ளது” என்றார். “இந்த திட்டத்தால் ஒரு நாளைக்கு மூன்று விதமான கட்டணங்களை மக்கள் செலுத்த வேண்டி வரும். விழாக்காலங்களில் ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை நடப் பது போன்று, மின் கட்டணத்திலும் நிகழும். இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வந்தே பாரத் ரயிலில் வசதிபடைத்தவர்கள் மட்டுமே செல்லும் நிலையில் கட்டணம் வைத்துள்ளனர். அதேபோன்ற நிலை மின்சாரத்திலும் ஏற்படும். சாதாரன மக்கள் பயன்படுத்தும் ரயில், மின்சாரம், கல்வி ஒவ்வொன்றையும் ஒன்றிய பாஜக அரசு பறித்து வருகிறது. ஒன்றிய அரசின் நிர்பந்தத்திற்கு மாநில அரசு பணியாமல், கேரள அரசை போன்று உறுதியான நிலையை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார். இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் மதுரவாயல் பகுதிச் செயலாளர் வி.தா மஸ் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். சரவண செல்வி, பகுதிக்குழு உறுப்பினர் கே.தண்டபாணி, 153வது வட்டச் செயலா ளர் ஆர்.கார்த்திக், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் வ.செல்வம், போரூர் பகுதி தலைவர் எம்.நடராஜன், செயலாளர் இர.குபேந்திரன், பொருளாளர் சி.ரவிகிருஷ்ணா உள்ளிட் டோர் பேசினர்.