சென்னை, பிப். 20 - நகர விற்பனைக் குழுவை முறையாக செயல்படுத்தக் கோரி சென்னையில் செவ்வாயன்று (பிப்.20) சிறுகடை வியாபாரி கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாலையோர வியாபாரிகள் வாழ் வாதாரத்தை பாதுகாக்க நகர விற்பனைக் குழு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, 2023ஆம் ஆண்டு மாநகராட்சி கணக்கெடுப்பில் 35 ஆயிரத்து 588 சாலையோர வியாபாரிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே மாநகராட்சி அடையாள அட்டை வழங்கியது. இந்த நிலையில் நகர விற்பனைக்குழு தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், நகர விற்பனைக்குழு சட்டப்படி முறையாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டி சென்னை மாநகர் சிறுகடை வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. போராட்டத்தின்போது கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.வி.கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நகர விற்பனைக்குழு கூட்டம் 3 மாதத்திற்கு ஒருமுறை நடைபெற வேண்டும். ஆனால், 2023 ஏப்ரல் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு இருமுறை மட்டுமே கூடியுள்ளது. இந்த கூட்டங்களிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பேச நேரம் ஒதுக்காமல், அவசர அவசரமாக நடத்தி முடித்துள்ளனர். 200 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில் நகர விற்பனைக் குழுவிற்கு 6 வியாபாரி கள் மட்டுமே தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். 4 பேர் நியமன உறுப்பினர்களாகவும், 5 பேர் அரசு அதிகாரி களாகவும் உள்ளனர். இதனால், வியா பாரிகளின் பிரச்சனைகளை முழுமையாக விவாதிப்பதில்லை. தெருவோர வியாபாரிகளின் பிரச் சனைக்கு தீர்வு காண நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும், கணக்கெடுத்த வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய முன்னுரிமை தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். போராட்டத்திற்கு கூட்டமைப்பின் தலை வர் சி.திருவேட்டை தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன், வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், கூட்டமைப்பு பொருளாளர் பி.மணிமாறன், துணைத் தலைவர் முஸ்தபா, துணைச் செயலாளர் மலைராஜ், நகர விற்பனைக் குழு உறுப்பினர்கள் கண்ணன், பலராமன், சித்ரா, மோனிஷா உள்ளிட்டோர் பேசினர்.