districts

சிறுதானியம்-காய்கறிகள் பயிரிட முன் வரவேண்டும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி, ஆக.18-

     கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுதானியங்கள், காய்கறிகள் பயிரிட விவசாயிகள் முன்வரவேண்டும் என்று  மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அறிவுறுத்தினார்.

     கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கிராமத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரும் காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது.

      இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஷ்ரவன் குமார் தலைமை  தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்ட மாகும். கடந்த சில ஆண்டுகளாக சரியான அளவில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கரும்பு, நெல் போன்ற பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.  

     நம் மாவட்டத்திலிருந்து பல்வேறு மாவட்டத்திற்கு வேளாண் பொருட்கள், காய்கறிகள் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு நம்மிடம் அனைத்து வசதிகளும் உள்ளது. விவசாயிகள் ஒரே பயிரை மட்டும் பயிரிடாமல் பல்வேறு வகையான மாற்றுப் பயிர் களை மாற்றி பயிரிட்டால் அதிக  அளவில் லாபம் ஈட்ட முடியும். தற்போது உள்ள வாழ்வி யல் சூழ்நிலையில், மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறு தானியங்களை, அதிக அளவில் பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும்” என்றார்.