சிதம்பரம், ஜூலை 31-
தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனை யொட்டி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்க ளுக்கு ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக் கழக கல்லூரி வளர்ச்சிக் குழு முதன்மையர் கோதை நாயகி கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு சான்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அண்ணாமலைப் பல்கலைக் கழக நான் முதல்வன் திட்ட செயற் பாட்டு மைய ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் சவுந்திர ராஜன் செய்திருந்தார்.