சென்னை, ஜன.3- சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டம் அண்மையில் நடைபெற்றது. மேலும் இக்கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு "திறமையான தகவல் தொடர்புக்கான சிந்தனையை வெளிப்படுத்துதல்" என்ற தலைப்பில் திறன் மேம்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆங்கில மொழி பாடப்பிரிவு மற்றும் தகவல் பரிமாற்றத் துறையைச் சேர்ந்த டாக்டர் ஆர். ராஜகுமாரி, தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவம் மற்றும் பல்வேறு முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பயனுள்ள தகவல் தொடர்புக்கு ஒருவரின் எண்ணங்களை வெளிப்படுத்தும் திறன் அவசியம் என்று அவர் கூறினார். நிகழ்ச்சி முடிவில் பேராசிரியர் எம்.எஸ். சரவணன் நன்றி கூறினார்.