சென்னை,அக்.5- தமிழ்நாட்டின் சுகாதார பணியாளர்களுக்கு செயல்சார் பயிற்சி செயல் திட்டத்தை சிங்கப்பூர் சுகா தாரத்துறையின் சிங்ஹெல்த் -ன் அனுபவமிக்க முதன்மை பயிற்சியாளர்கள் நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடல்நல பராமரிப்பை மேம்படுத்த இந்த பயிற்சி உதவும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தாய்மார்களும், குழந்தைகளும் மிக உயர்ந்த தளத்திலான மருத்துவ சிகிச்சையையும், பராமரிப்பையும் பெறு வதை இந்த பயிற்சி உறுதி செய்யும் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணி யன் கூறினார். “சிங்ஹெல்த் – உடன் மாநில அரசு மேற்கொண் டுள்ள கூட்டாண்மை வழி யாக நிபுணத்துவம், ஆதார வளங்கள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் வழி யாக உடல்நல பராமரிப்பு சேவைகளை நாம் மேம்ப டுத்துவது மட்டுமின்றி இந்தியா சிங்கப்பூர் நாடு களுக்கிடையே நீடித்து நிலைக்கும் நல்லுறவுகளை யும் பேணி வளர்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மக்க ளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கு வது மீது நாம் கொண்டி ருக்கும் பொறுப்புறுதியை இந்த முன்னெடுப்புகள் பிரதி பலிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இச்செயல்திட்டத்தின் முதல் கட்டத்தில் 2018ஆம் ஆண்டு முதல் , 560 தாய், சேய் நல பணியாளர்களின் திறனை அதிகரித்தது ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வா கும். இரண்டாவது கட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.