செங்கல்பட்டு, அக்.21- சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் சட்டவிரோதமாக செயல்படும் பரனூர் சுங்கச்சாவடியை இழுத்து மூட வலியுறுத்தி சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தும் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசும், மாவட்ட ஆட்சி நிர்வாக மும் பரனூர் சுங்க சாவடியை அகற்றிவிட வும், அதன் சட்டவிரோத கொள்ளையை தடுத்து நிறுத்துவதோடு. நடந்துள்ள மோசடிகளை வெளிக்கொண்டு வரும் வகை யில் விசாரணை ஆணையத்தை உருவாக்கி விசாரித்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள், வியாபாரிகள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், வேன் உரிமை யாளர்கள் சங்கம், மனித உரிமைகள் நல அமைப்பு, மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நல சங்கம், மோட்டார் வாகன சங்கம், குடியிருப்போர் நல சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் சனிக்கிழமையன்று (அக். 20) பரனூர் சுங்கச்சாவடியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா தலைமையில் இந்த இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநில தலைவர் யுவராஜ் முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், வி.அரி கிருஷ்ணன், செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே.வேலன், காட்டாங்கொளத்தூர் பகுதி செயலாளர் குணசேகரன் மாவட்ட குழு உறுப்பினர் நாராயணன், மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் கணேஷ், மாநில பொதுச் செயலாளர், காதர் மொய்தீன் மதிமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் சார்லஸ், தேமுதிக பொறுப்பாளர் பிரகாஷ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொறுப்பாளர் அழகு, திக நிர்வாகிகள் பா.கருணாகரன், சமத்துவமணி, வேன் உரிமையாளர்கள் சங்க தலைவர் அழகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.