எழும்பூர் பகுதி 108வது வார்டு மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேத்துப்பட்டு கிளைகள் சார்பில் ஞாயிறன்று (டிச.18) கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கிளைச் செயலாளர்கள் அன்பு, பத்மநாபன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தை கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தொடங்கி வைத்தார். பகுதிச் செயலாளர் கே.முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.