ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரி அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் ஊராட்சி வெற்றிலைக்காரனூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஹேமலதா, பாரதி, தேன்மொழி, நிர்வாகிகள் சாந்தி, பிரபாவதி, பார்வதி, ராதா, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.