சென்னை, அக். 27- தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உலக தரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலை யில் சென்னை வாசிகளை அதிர்ச்சிக் குள்ளாக்கும் விதமாக சென்னை யின் பல இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ள தாக அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது. காற்று மாசுபாடு என்றால் நமது நினைவுக்கு முதலில் வருவது தில்லி. அந்த வரிசையில் தற்போது சென்னையும் இணைந்துள்ளது. தில்லி அளவிற்கு இல்லை என்றாலும் கொஞ்சம் அதிர்ச்சி யூட்டும் வகையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. சென்னை யில் கடந்த 23ஆம் தேதியிலிருந்து காற்றின் தரம் மோசமடைந்து வருவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று தரக் குறியீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சென்னையில் கொடுங்கையூர், மணலி, ராயபுரம், அரும்பாக்கம், ஆலந்தூர், பெருங்குடி ஆகிய பகுதி களில் காற்றின் தரம் மோச மடைந்துள்ளது. மேலும் சென்னை யில் ஒட்டுமொத்தமாக காற்றின் தரக் குறியீடு 117 முதல் 195 வரை பதி வாகியுள்ளது. சென்னையில் அக்டோபர் 23ஆம் தேதி காற்றின் தரக் குறியீடு 109 ஆகவும், 24ஆம் தேதி 121 ஆகவும், 25ஆம் தேதி 127 ஆகவும், அக்டோபர் 26ஆம் தேதி ஆலந்தூரில் காற்று தர குறியீடு 192 ஆகவும், ஆலந்தூர் பேருந்து பணிமனை அருகே காற்று தர குறியீடு 104 ஆகவும், கொடுங்கையூரில் காற்று தர குறியீடு 119 ஆகவும், அரும்பாக்கத்தில் 111 ஆகவும், ராய புரத்தில் 103 ஆகவும், பெருங்குடி யில் 152 ஆகவும், வேளச்சேரியில் 71 ஆகவும் பதிவாகியுள்ளது. பொதுவாக காற்றின் தர குறியீடு ஐம்பதை தாண்டினாலே உடல்நல பிரச்சனை ஏற்படும் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவிக்கிறது. இந்நிலையில் சென்னையில் சதத்தை தாண்டியுள்ள தரக் குறியீடு மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. வடகிழக்கு வங்கக்கடல் பகுதி யில் நிலவும் ஹாமூன் புயலின் தாக்கத்தால் சென்னைக்கு வடக்கில் இருந்து காற்று வீசுவதால் இந்த காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ள தாகவும், புயல் வலுவிழந்து அதன் தாக்கம் குறைந்தால் காற்று மாசும் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இது சென்னை யில் ஏற்பட்டுள்ள காற்று மாசு பாட்டை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பொது மக்கள் பட்டாசுகள் வெடிப்பதை குறைத்துக் கொண்டால் நல்லது என சுற்றுச்சூழல் ஆர்வ லர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தீபாவளி பண்டிகை காலத்தில் பெரியவர்கள், சளி தொந்தரவு உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் கவனமாக இருப்பது நல்லது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் காற்று மாசுபாடு என்பது மனிதர்களை சத்தமே இல்லாமல் கொல்லும் காரணி என ஆய்வாளர்கள், நிபு ணர்கள் எச்சரிக்கின்றனர். எப்படி இருந்தாலும் தில்லியில் இருப்பது போன்ற ஒரு நிலைமை சென்னைக்கு வந்து விடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.